News Update :
Home » » தெரிந்த கொசு,தெரியாத தகவல்கள்

தெரிந்த கொசு,தெரியாத தகவல்கள்

Written By Admin on Monday, 3 October 2011 | 04:01


கொசு கடித்து விட்டால் போதும்,''இந்த கொசுக்கடி தாங்க முடியலப்பா'' என்று எரிச்சலுடன் சொல்வோம்.உடனே கடித்த இடத்தில் சொரிய ஆரம்பித்து விடுவோம்.இதில் என்ன விசேஷம் என்றால்,பற்களே இல்லாத கொசு நம்மைக் கடிக்கிறது!.

கொசு கடித்ததும்,நாம் ஏன் சொரிகிறோம் என்று தெரியுமா?.

கொசுவிற்கு அதன் கண்களுக்கு கீழே ஊசி போன்ற ஆறு உறிஞ்சுக்குழல்கள் உள்ளன.இது மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சி விடுகிறது.பின்னர்,இந்த இரத்தம் உறைந்து போகாமல் இருக்க ஒரு ரசாயனப் பொருளையும் கடித்த இடத்தில் கொசு உமிழ்ந்து விடுகிறது.அதனால் தான் நமக்கு சொரிய வேண்டும் என்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

உலகில் சுமார் 2700 வகையான கொசுக்கள் உள்ளன.கொசு பறப்பதில் கில்லாடி.இது தலைகீழாக கூட பறக்கும்.மழை பெய்யும் போது ,மழைத்துளிகளின் இடையே நனையாமல் கூட பறக்குமாம்.பெண் கொசுக்கள் தான் கொடூரமானவை.ஆண் கொசுக்கள் சைவம்தான்.இவை புல்,தழை,பூக்களில் உள்ள தேனை மட்டுமே சாப்பிடுகின்றன.

பெண் கொசுக்களுக்கு முட்டைகளைப் பொரிக்க இரத்தம் தேவைப்படுவதால் தான் மனிதர்களின் இரத்தத்தை மோப்பம் பிடித்து உறிஞ்சுகின்றன.
Share this article :

0 comments:

Post a Comment