News Update :
Home » » ஆய்வில் தகவல் தூக்கணாங் குருவிகள் இயற்கையாக கூடு கட்டும்

ஆய்வில் தகவல் தூக்கணாங் குருவிகள் இயற்கையாக கூடு கட்டும்

Written By Admin on Wednesday, 5 October 2011 | 10:51


தூக்கணாங் குருவிக்கு கூடு கட்டும் திறன் இயற்கையாகவே அமைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கணாங் குருவி எவ்வாறு கூடு கட்டுகிறது, வேறு எந்த முறையையும் அது பின்பற்றுகிறதா என்பது பற்றி எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இது குறித்து பல்கலைக்கழக டாக்டர் பேட்ரிக் வால்ஸ் கூறுகையில், இனப்பெருக்க காலத்தின் போது கூடுகட்டத் தொடங்கும் தூக்கணாங் குருவிகள் கட்டும் ஒவ்வொரு கூடுகளில் வேறுபாடு தென்படுகின்றன. 

அவ்வாறாக சில குருவிகள் இடமிருந்து வலது புறமாகவும், சில வலமிருந்து இடது புறமாகவும் கூடு கட்டுகின்றன. தூங்கணாங் குருவிகள் ஒரே முறையில்தான் கூடு கட்டுகின்றன என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாங்கள் கண்ட காட்சியில் மாற்றம் தெரிந்தது. மேலும் குருவிகள் எந்தவொரு அனுபவமும் இல்லாமல் கூடு கட்டுகின்றன. இதற்கான திறன் தூக்கணாங் குருவிக்கு இயற்கையிலே அமைந்துள்ளது என்று வால்ஸ் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

Post a Comment