News Update :
Home » » ''ஆன்டிபயாட்டிக்''

''ஆன்டிபயாட்டிக்''

Written By Admin on Monday, 3 October 2011 | 05:08

''ஆன்டிபயாட்டிக்''?


பென்சிலினைக் கண்டறிந்தவர் அலெக்சாண்டர் பிளமிங்.இவர் ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி.இவர் 1928-ல் முதன் முதலில் உயிருக்கு எதிரி என்ற கருத்தில் ''ஆன்டிபயாட்டிக்'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.தனது ஆராய்ச்சிக்கூடத்தில், கிருமிகள் கண்ணாடிக் கிண்ணங்களில் எவ்வாறு வளர்கின்றன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது,ஒரு கிண்ணத்தில் தானாக வளர்ந்திருந்த பூஞ்சையின் சுரப்பு நீர் மற்ற உயிரினங்களை அழித்துக் கொண்டிருப்பதை கண்டார்.

கிண்ணத்தில் தானாக வளர்ந்த பூஞ்சையின் பெயர்,'பெனிசிலியம் நொட்டேட்டம்'. இறந்து கொண்டிருந்த உயிரியின் பெயர்,'ஸ்டபைலோ கொக்கஸ்' என்ற பாக்டீரியா.பூஞ்சையில் இருந்து சுரந்த பெனிசிலின் என்ற வேதிப்பொருள் தான் பாக்டீரியாவை அழித்துக் கொண்டிருந்தது.இதை கண்டு கொண்டு,ஹாவர்டு ப்ளோரி,எர்னஸ்ட் செயின் என்ற இருவரும் 1940-ல் பெனிசிலினைத் தனிமைப்படுத்தி ஊசி மூலம் மருந்தாகப் பயன்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தனர்.

இதற்காகவே இவர்கள் இருவருக்கும் பிளமிங்குடன் சேர்ந்து 1945-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Share this article :

0 comments:

Post a Comment