News Update :
Home » » குப்பையில் ஒரு காடு

குப்பையில் ஒரு காடு

Written By Admin on Friday, 16 September 2011 | 03:21


           இருக்கும் காடுகளை அழிப்பதுதான் இந்தியர்கள் ஸ்டைல்.ஒவ்வொரு நாளும் கணிசமான காடுகள் அழிந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் ஜப்பானில் நிலையே வேறு.அங்கு காடு இல்லை.இருந்தாலும் அவர்கள் உருவாக்கினார்கள்.

               உட்கார்த்து ரூம் போட்டு யோசிப்பார்களோ என்னவோ தெரியவில்லை.

                ஜப்பானியர்களின் மூளையே மூளை.ஜப்பானில் முழுக்க முழுக்க கான்கிரீட் காடுகள் தான்.மருந்துக்குக்கூட ஒரு சென்ட் ஒரிஜினல் காடு கிடையாது.ஆனால் நாடு என்று ஒன்று இருந்தால் அதற்குள் காடு என்ற ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.நிலங்களை எல்லாம் வீடுகள் ஆக்கிரமித்து இருக்க வேறு என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் இருந்த ஜப்பானிய அரசின் நினைவுக்கு வழக்கம் போல் கடல் தான் நினைவுக்கு வந்தது.கடலில் காடுகள் உருவாக்க நினைத்தது.

            அது எப்படி முடியும்?

               ஜப்பானில் குப்பைகளுக்கு பஞ்சமே இல்லை.மொத்தக் குப்பைகளையும் கடலில் ஒரே இடத்தில் கொட்டினார்கள்.செயற்கையாக ஒரு தீவை உருவாக்கினார்கள்.குப்பை மேல் மண்ணை நிரப்பினார்கள்.அதில் மரம் வளர்ப்பதுதான் திட்டம்.இதில் இரண்டு நன்மைகள் உண்டு.இதனால் குப்பை காலியாகும்.சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது.காடும் வளர்க்கலாம்.கார்பனையும் கட்டுப்படுத்தலாம் என்று நம்பிக்கையோடு களம் இறங்கினார்கள்.


              2008 நவம்பர் முதல் இப்போது வரை 9 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து இருக்கிறார்கள். 88 ஹெக்டேரில் உருவாகிக் கொண்டு இருக்கும் இந்த காடு 2016-ம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வருமாம்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Share this article :

3 comments:

உஜிலாதேவி நந்தவனம் said...

ஐயா வணக்கம் தங்களின் இந்த படைப்பை உஜிலாதேவி நந்தவனத்தில் வெளியிட்டுள்ளோம்

http://ujiladevinandavanam.forumta.net/t26-topic

Tamil KaraokeZ said...

NiCe Da ...........

Admin said...

தங்களது ஆதரவிற்க்கு மிக்க நன்றி.

Post a Comment